நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க பொருத்தமான தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் மத்தியில் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க மிகவும் பொருத்தமான தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே என ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அரசாங்கத்தை பொறுப்பேற்ற போது வேலையில்லாத் திண்டாட்டத்தை அகற்றி அந்நிய செலாவணியை அதிகரிக்க ரணில் விக்ரமசிங்கவினால் முடிந்தது.

பாதாளத்தில் விழுந்திருந்த நாட்டை மீட்டெடுக்க அவரால் முடிந்தது. ரணில் விக்கிரமசிங்க கடந்த இரண்டு வருடங்களில் நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக, குருநாகலில் இன்று இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அசங்க நவரத்ன குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )