தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், நாட்டில் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பு மாற்றப்படும்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், நாட்டில் ஊழல் நிறைந்த அரசியல் அமைப்பு மாற்றப்படும் என அதன் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பணத்துக்காகவும் அமைச்சுப் பதவிக்காகவும் கட்சி மாறும் அரசியல் அமைப்பு இந்த நாட்டில் உள்ளது. யாராவது கட்சி மாறினால் அவரது; பாராளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்கும் புதிய சட்டம் கொண்டு வரப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

கெப்பித்திகொல்லேவில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )