ஜனாதிபதி தேர்தல்:வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 15ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு காரியாலயத்தில்

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் எதிர்வரும் 15ஆம் திகதி புதன்கிழமை காலை ஒன்பது மணியில் இருந்து 11 மணி வரை தேர்தல் ஆணைக்குழு காரியாலயத்தில் இடம்பெறும்.

அன்றையதினம் காலை 11 மணியில் இருந்து 11.30 வரை வேட்புமனுக்களுக்கான முறைபாடுகள் மற்றும் எதிர்ப்புகளை தெரிவிக்க சந்தர்ப்பம் உண்டு.

வேட்புமனு தாக்கதல் செய்வதற்கு முன்னர் ஏற்கனவே குறிப்பிட்ட வேட்பாளர் தேரத்லுக்கான கட்டுப்பணம் செலுத்தியிருந்தல் வேண்டும்.

சாதாரணமாக ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்பாளர் ஒருவர் 75 ஆயிரம் ரூபா கட்டுப்பணம் செலுத்த வேண்டும்.

வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலஎல்லை எதிர்வரும் புதன்கிழமை நண்பகல் 12 மணிவரை இடம்பெறும்.

சாதாரணமாக எதிர்வரும் 15ஆம் ;த்pகதி வரை வார நாட்களில் காலை 8.30 முதல் மாலை 4.15 வரை தேர்தல் ஆணைக்குழு பிரதான காரியாலயத்தில் கட்டுப்பணம் செலுத்தலாம்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )