இலங்கை கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் – இங்கிலாந்து

இலங்கை கிரிக்கெட் அணியின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலும் ஏற்பட்ட குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறைகளைத் தொடர்ந்து எழுந்துள்ள பாதுகாப்புப் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

மூன்று ரெஸ்ட் போட்டிகளைக் கொண்ட கிரிக்கெட் சுற்றுத்தொடரில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணி நாளை இங்கிலாந்து பயணமாகவிருக்கின்றது.

அணி வீரர்களின் பாதுகாப்புப் பற்றி, இங்கிலாந்து கிரிக்கெட் சபை உடனடியாக உத்தரவாதம் வழங்கியதாக இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் மஹிந்த கலன்கொட தெரிவித்துள்ளார்.

இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 21ஆம் திகதி மஞ்செஸ்டர் நகரில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )