தேர்தல் காலத்தில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்படாது.

தேர்தல் இடம்பெறும் காலப்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

தேசிய வானொலியுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது, அவர் இதுபற்றி கருத்து வெளியிட்டார்.

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் வேட்பாளர்கள் பற்றியும், அவர்களின் ஆதரவாளர்கள் தொடர்பிலும் தகவல்கள் தெரியவந்திருக்கின்றன.

கடந்த செப்டெம்பர் மாதம் 24ஆம் திகதி தொடக்கம் இன்றுவரை தேர்தல் பற்றிய 120 முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன.

உரிய சம்பவங்களுடன் தொடர்புடைய 130 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். தனிப்பட்ட நபர்களுக்கு சொந்தமான 31 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளார்கள்.

பொதுத் தேர்தலுக்கான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )