அரிசி மற்றும் நெல் தொகை தொடர்பான அறிக்கை ஜனாதிபதியிடம்

நாட்டில் தற்போதுள்ள அரிசி மற்றும் நெல் கையிருப்பு தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.

இதற்குத் தேவையான தகவல்கள் அண்மைய நாட்களில் அரிசி ஆலை உரிமையாளர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளன.

அதற்கான அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அறிக்கைக்கு பிறகு அரிசி தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )