வடக்கிற்கான ரெயில் சேவை இன்று மீண்டும் ஆரம்பம்.

வட பிராந்தியத்திற்கான ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகும்.

மஹவ மற்றும் அனுராதபுர பிரதேசங்களுக்கு இடையிலான ரெயில் பாதையின் அபிவிருத்திப் பணிகள் காரணமாக இந்த ரெயில் சேவை கடந்த சில மாதங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

அதற்கமைய, இன்று அதிகாலை 5.45இற்கு கொழும்பு கோட்டையில் இருந்து இந்த ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது.

இது காங்கேசன்துறையை மதியம் 1.23இற்கு சென்றடையும். காங்கேசன்துறையில் இருந்து காலை 10.30இற்கு ஆரம்பமாகும் ரெயில் சேவை மாலை 6.30இற்கு கொழும்பு கோட்டையை வந்தடையும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )