தேசிய ஓய்வூதிய தினம் இன்றாகும்.

இன்று தேசிய ஓய்வூதிய தினமாகும்.  இதனை முன்னிட்டு பிரதம மந்திரி கலாநிதி ஹரினி அமரசூரிய வாழ்த்துச் செய்தியொன்றை விடுத்துள்ளார்.
இன்று ஓய்வூதிய வசதிகளை பெறுவோர் தொழிற்படையின் பங்குதாரர்களாக நாட்டுக்கு ஆற்றிய சேவைகளை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்.
ஓய்வூதியம் பெறுவோர் ஆரோக்கியம் நிறைந்த, ஆன்மீக ரீதியில் வளர்ச்சி கண்ட கலாசார பிரஜைகளாக வாழ்வதற்கு தேவையான பின்புலத்தை ஏற்படுத்துவது சகலரது பொறுப்பாகும் என பிரதமர் கூறியுள்ளார்.
சகல பிரஜைகளும் ஓய்வூதியம் பெறக்கூடிய பரந்த சமூக பாதுகாப்பு வேலைத்திட்டத்தை உருவாக்குவது அவசியம். இந்த நடைமுறையில் ஓய்வூதியம் பெறும் சமூகம் பங்குதாரர்களாக இருப்பது கட்டாயமானது என கலாநிதி ஹரினி அமரசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )