ஜனாதிபதித் தேர்தல்: பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடல் பாதுகாப்பு அமைச்சில்

ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சில் இன்று நடைபெற்றது.

இதில் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக்க தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஏற்கனவே, 11 மாவட்டங்களில் ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஏனைய மாவட்டங்களுக்கான அதிகாரிகள் இன்று பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்படுவர்.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 153 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அவற்றில் பெரும்பாலானவர்கள் ஜனாதிபதி தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )