இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக நாமல் கூறுகிறார்.

இளைஞர் யுவதிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக நாமல் கூறுகிறார்.

இளம் சமூகத்தினரின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றப் போவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இளம் சமூகத்தினர் நவீன உலகிற்கு ஏற்றவாறு பயணிக்க வேண்டும். பொருளாதாரத்தின் பங்குதாரர்களாக இளைஞர் யுவதிகளை மாற்ற வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டிற்குத் தேவையான அரச கொள்கைத் திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மினுவாங்கொடயில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போதே நாமல் ராஜபக்ஷ இந்த விடயத்தைக் தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )