வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்படும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்படும்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் கீழ் வடக்கு கிழக்கின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அம்பாறை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தவிர்ந்த ஏனைய கட்சிகளுடன் இணைந்துள்ள குழுக்கள் மீண்டும் தமது கட்சியுடன் இணைந்து செயற்படும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுடன் இணைந்து கட்சியை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )