அழிவு அரசியலின் விளைவுகளை மக்கள் அனுபவிக்கின்றனர் – அனுரகுமார

அழிவு அரசியலின் விளைவுகளை மக்கள் அனுபவிக்கின்றனர் – அனுரகுமார

அழிவு அரசியலின் விளைவுகளை பல தசாப்தங்களாக மக்கள் அனுபவித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக தமது கட்சி உறுதியுடன் செயற்;;படும் என தெரிவித்தார்.

தமது கட்சியின் வெற்றி எதிர்காலத்தில் தெரியும். சில கட்சிகளுக்கு தனக்கென தனி பிரசாரம் கூட இல்லை. தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை சிறப்பாக வழிநடத்துவது அவசியம்.

நாட்டை மீளக் கட்டியெழுப்ப ஒரு அறிவார்ந்த குழு தேவை. பல்வேறு துறைகளில் அறிவும் அனுபவமும் கொண்டவர்கள் தமது கட்சியைச் சுற்றி திரண்டுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )