ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று பிற்பகல்.

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட மாநாடு இன்று பிற்பகல் 2 மணிக்கு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.

கட்சியின் தலைவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாநாடு நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இதில் தொகுதிகளை சேர்ந்த கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதிக்கு ஆதரவை வழங்கும் ஏனைய அரசியல் கட்சிகளின் பிராந்திய தலைவர்களும் இதில் பங்கேற்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் அனைத்து கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )