பங்களாதேஷ் மக்கள் அமைதி காக்க வேண்டும் – மொஹம்மட் யூனுஸ்

பங்களாதேஷ் மக்கள் அமைதி காக்க வேண்டுமென, இடைக்கால தலைவராக பதவியேற்கத் தயாராகும், மொஹம்மட் யூனுஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

வன்முறைகளில் இருந்து விலகியிருக்குமாறு யூனுஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் இன்று பிற்பகல் நாட்டு மக்களுக்காக அறிக்கையொன்றை விடுத்தார்.

பிரதமர் ஷேய்க் ஹசீனா நாட்டை விட்டு தப்பியோடக் காரணமாக இருந்த மாணவர் இயக்கம், பங்களாதேஷை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்குமாறு மொஹம்மட் யூனுஸைக் கேட்டிருந்தது.

இந்த நிலையில், அவர் நாளை இடைக்கால தலைவராக சத்தியப்பிரமாணம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )