இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு கடும் பதிலடி கொடுப்பதாக அந்நாட்டு பிரதமர் தெரிவிப்பு.

ஹமாஸ் அமைப்பின் உயர்மட்ட தலைவர் கொல்லப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேல் மீது மேற்கொள்ளப்படும் எந்த தாக்குதல்களுக்கு கடும் பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஈரானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த போது கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், பாதுகாப்பு உள்ளிட்ட எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் இஸ்ரேல் தயாராக உள்ளதாக பெஞ்சமின் நெதன்யாஹூ குறிப்பிட்டுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போதே பென்ஜமின் நெதன்யாஹூ இதனை தெரிவித்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )