ஊடகப் பிரதானிகள் பங்கேற்கும் விசேட கூட்டம் நாளை தேர்தல் ஆணைக்குழுவில்.

ஊடக நிறுவன பிரதானிகள் கலந்து கொள்ளும் கூட்டமொன்று நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் ஊடகங்கள் எவ்வாறு செயற்பட வேண்டுமென ஆலோசனை வழங்குவது கூட்டத்தின் நோக்கம் என அறிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக பொலிஸ் உத்தியோகத்தர்கள் 50 ஆயிரம் பேரை ஈடுபடுத்துவதற்கு பொலிஸ் தலைமையகம் எதிர்பார்த்துள்ளது.

வாக்குச் சாவடிகளின் பாதுகாப்பு கடமைகளில் கூடுதலான பொலிசார் ஈடுபடுத்தப்படுவார்கள். இவர்களுக்கு முப்படையினரின் உதவியும் வழங்கப்படுமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவில் தெரிவத்தாட்சி அதிகாரிகள் பங்கேற்ற கூட்டமொன்று இடம்பெற்றது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )