நுகர்வோர் அதிகார சபை தயாரித்த அறிக்கை ஜனாதிபதியிடம் இன்று கையளிப்பு. 

நெல், அரிசி கையிருப்பு என்பன பற்றித் தயாரிக்கப்பட்ட அறி;க்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்காவிடம் இன்று கையளிக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம், பொலநறுவை உட்பட நான்கு மாவட்டங்களின் தரவுகள் இதில் இடம்பெற்றுள்ளன. நாடாளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட இது தொடர்பான ஆய்வின் தகவல்கள் வர்த்தக அமைச்சிற்கும் அனுப்பப்பட்டிருக்கின்றன.
நாட்டின் பத்து மாவட்டங்களில் உள்ள நெல் ஆலை உரிமையாளர்களின் கையிருப்பில் காணப்படும் நெல், அரிசி என்பனவற்றின் கையிருப்புப் பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஹேமந்த சமரக்கோன் மேலும் தெரிவித்தார்.
CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )