தொழிற்சாலைகளை தீயிட்டுக் கொழுத்திய தரப்பிற்கு புதிய தொழிற்சாலைகளை உருவாக்க முடியாது

தொழிற்சாலைகளை தீயிட்டுக் கொழுத்திய தரப்பிற்கு புதிய தொழிற்சாலைகளை உருவாக்க முடியாது

நாட்டில் உள்ள தொழிற்சாலைகளை தீயிட்டுக் கொழுத்திய தரப்பிற்கு நாட்டில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியாது என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சிறு மற்றும் மத்தியதர தொழில் முயற்சியாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். கேகாலையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்தார்.

பயிர்ச்செய்கை மேற்கொள்ளாது கைவிடப்பட்டிருக்கும் அரச காணிகளை தொழில் அற்ற இளைஞர் – யுவதிகளுக்கு வழங்கி, அவர்களை சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறினார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )