விடுமுறையில் செல்லும் மக்களுக்கு விசேட போக்குவரத்து சேவைகள்.

இன்று ஆரம்பமான நீண்ட வார இறுதி விடுமுறை காரணமாக, சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு விசேட போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

பயணிகள் தேவை அதிகம் உள்ள பகுதிகளுக்கு மேலதிக பஸ் சேவைகள் இடம்பெறுகின்றன. அதன்படி, உரிய நேர அட்டவணைக்கு அப்பால், பஸ்களை சேவையில் ஈடுபடுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தயாராகியுள்ளது.

இதேவேளை, இன்றைய தினமும் சில ரயில்கள் விசேட சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )