ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் நாட்டை வந்தடைந்தனர்.

ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்களின் முதலாவது குழு இலங்கை வந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்த சில வாரங்களில் மற்றொரு குழு நாட்டுக்கு வர உள்ளது. பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் குழு ஏற்கனவே நாட்டை வந்தடைந்தது.

தேர்தலை கண்காணிப்பதற்காக அவர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலை கண்காணிப்பதற்காக ஆசிய தேர்தல் கண்காணிப்பு வலையமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்றும் அடுத்த சில நாட்டிகளில் இலங்கை வரவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )