பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை – அஜித் மான்னப்பெரும

இம்முறை பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

20 வருடங்களாக தாம் வகித்துவந்த கம்பஹா மாவட்டத் தொகுதி அமைப்பாளர் பதவி தமக்குத் தெரிவிக்கப்படாமல், வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டதால் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் பட்டியலில் இருந்தாலும், பொதுத் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை என அவர் அறிவித்துள்ளார்.

வேட்புமனுவில் கையொப்பமிடும் போது கட்சித் தலைவர் தம்மிடம் அதனை தெரிவிக்கவில்லை என இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )