மத்திய வங்கி ஆளுனர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு ரத்து.

இலங்கை மத்திய வங்கி ஆளுனர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய, முன்னாள் ஆளுனர்களுக்கோ, தற்போதைய ஆளுனர்களுக்கோ, எதிர்கால ஆளுனர்களுக்கோ ஓய்வூதியக் கொடுப்பனவு கிடைக்க மாட்டாதென இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் அமுலுக்குவரும் வகையில் மத்திய வங்கி ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

1998ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் மத்திய வங்கி ஆளுனர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு ரத்து செய்யப்பட்டிருந்தாலும், கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இது மீண்டும் அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )