லங்கா சதொச: அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் பலவற்றின் விலைகளை குறைத்துள்ளது. நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில், இந்த விசேட விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள லங்கா சதொச விற்பனை நிலையங்களில் இன்று முதல் புதிய விலையில் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

அதன்படி, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ உருளைக்கிழங்கு 35 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 240 ரூபாவாகும்.

வெள்ளை கௌபி ஒரு கிலோ 22 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 998 ரூபாவாகும்.

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 265 ரூபாவாகும்.

சிவப்பு கௌபி, கீரி சம்பா, வெள்ளை மற்றும் சிவப்பு சீனி, பருப்பு ஆகியவற்றின் விலைகளும் குறைக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )