ரணிலை வாசிக்கவும் பிரசார வேலைத்திட்டம் ஆரம்பம்.

ரணிலை வாசிக்கவும் பிரசார வேலைத்திட்டம் ஆரம்பம்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ரணிலை வாசிக்கவும் என்ற பிரசார வேலைத்திட்டம் இன்று நாடு தழுவிய ரீதியில் ஆரம்பிக்கப்பட்டது.

ரணில் விக்கிரமசிங்க என்ற பாத்திரத்தை அரசியல், சமூக மற்றும் கலாசார ரீதியில் வாசிக்கும் வாய்ப்பு இந்த வேலைத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ரணில் விக்ரமசிங்கவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான இயலும் ஸ்ரீலங்கா விஞ்ஞாபனத்தின் சாராம்சம் அடங்கிய துண்டுப் பிரசுர விநியோகம் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு போன்றவை இதன் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

குறித்த வேலைத்திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )